இந்த வலைப்பதிவில் தேடு

19 மே, 2022

படித்ததில் பிடித்த கவிதைகள்

படித்ததில் பிடித்த கவிதைகள்

















எதையும் சொல்லவில்லை. 
எதையும் கேட்கவில்லை.
'சும்மாதான் வந்தேன்' என்று'
விட்டுப் போனான். 
காற்றுப் போல
வெயிலைப் போல
சும்மாதான் வருகிறவர்கள் முக்கியம் எனக்கு.

- கல்யாண்ஜி

சின்னச் சின்னக் கவிதைகள்

சின்னச் சின்னக் கவிதைகள் 


கல்வி என்பது உள்ளே இருப்பதை
வெளியே கொண்டுவருவது தான்
வெளியில் இருப்பதை உள்ளே திணிப்பதல்ல

-அப்துல்ரகுமான்


குளிர் காய்வதற்காய் 
சுள்ளி பொறுக்கச் சென்றாய்,
சுள்ளி பொறுக்குவதிலேயே 
உன் காலம் கழிந்துவிட்டதே,
எப்போது நீ குளிர் காயப் போகிறாய்?

-அப்துல் ரகுமான்


முதுகெலும்பு இல்லாத
ஒரே குற்றம் தான்.
முள்ளில் எளிதாக
வளைத்துக் கோர்க்க
புழுக்களையே தேர்ந்தெடுக்கிறார்கள்
தூண்டில்காரர்கள்.

-கண்மணி குணசேகரன்


இப்படித் தான் இருக்கும்
என்று ஏற்றுக் 
கொள்ளாதீர்கள்.
எப்படியும் இருக்கட்டும்
என்று விட்டு விடாதீர்கள்.

-கல்யாண்ஜி


(எங்கே நம்மை அடக்கியாள விரும்புகிறார்களோ அங்கே நாம் சுதந்திரமாக இருக்க முயல வேண்டும்.

எங்கே நம்மைச் சுதந்திரமாக விட்டு விடுகிறார்களோ அங்கே நாம் மிகவும் அடக்கமாகவும், கட்டுப்பாடாகவும் நடந்து கொள்ள வேண்டும்

-நா.பார்த்தசாரதி)



நடு ராத்திரியில்
வாங்கி வர சொன்ன பொம்மையை 
தூங்கி போன குழந்தையின் அருகில் வைத்து 
தலை தடவி பார்க்கும்
ஒரு தகப்பனின்
மூச்சில் ஓடிக்கொண்டிருக்கிறது

பேரன்பின் வெப்பம்!


- யாரோ

காதல் கவிதைகள்

என்னை என் குறைகளோடு
ஏற்றுக்கொள்கிறவனே 
என் காதலன் என்றாள் அவள்

அவளை
ஏற்றுக்கொண்டவன் சொன்ன
முதல் வாக்கியத்திலேயே
மூர்ச்சையுற்றாள்

இதோ...
பாட்டு வரிகள்

--- வைரமுத்து 








20 பிப்ரவரி, 2022

பிடித்த கவிதைகள் சில

பிடித்த கவிதைகள் சில

மனுஷ்ய புத்திரன் :


கோ.மோகன்ராம்

அரிக்கண்ணன் :

வண்ணதாசன் கல்யாண்ஜி



ஃப்ரான்சிஸ் கிருபா :


கி.சரஸ்வதி
எஸ்.ஆர்.இராஜாராம்

சாய்மீரா

: