இந்த வலைப்பதிவில் தேடு

tamil poems லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tamil poems லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10 ஜனவரி, 2021

2. ஆனந்த விகடன் முத்திரை கவிதைகள் 2

ஆனந்த விகடன் 
பவள விழா முத்திரை கவிதைகள் 

2

முத்திரை கவிதைகள் படைத்தோர்களுக்கு எம் நன்றிகள் :

தாஜ், மனுஷ்ய புத்திரன், கனிமொழி, பொன்.சுதா

கல்யாண்ஜி, மேஹாஷ், இளம்பிறை, க.சரவணன்,

வித்யாஷங்கர்,  நா.முத்துக்குமார்,  வெண்ணிலா, நிலாக்குட்டி,

நெல்லை ஜெயந்தா, ஜெயந்த், ஜி. விஜயலெட்சுமி

மற்றும் ஆனந்த விகடன்

       17.11.20027.11.2002




எதிர்பார்ப்பு :


வீட்டுக்குள்
கூட்டிப் பெருக்கி
சமைத்துக் கழுவி
துவைத்துப் பிழிந்து
களைத்துப் போன
மனைவிகள் காத்திருக்கிறார்கள்
கணவனின் விடுமுறையில்
ஊர், உலகு பார்க்க...

உறங்கப் பொழுதின்றி
ஊர் உலகு சுற்றி
உழைத்துக் களைத்து
சலித்துப் போன
கணவர்கள் காத்திருக்கிறார்கள்
தனது விடுமுறையில்..
வீட்டில் ஓய்வெடுக்க

- பொன்.சுதா













9 ஜனவரி, 2021

1. ஆனந்த விகடன் முத்திரை கவிதைகள் 1

ஆனந்த விகடன் 
பவள விழா முத்திரை கவிதைகள் 1

முத்திரை கவிதைகள் படைத்தோர்களுக்கு எம் நன்றிகள் :

தாஜ், வித்யாஷங்கர், பா.சத்தியமோகன், ஜெயபாஸ்கரன்,

எஸ்.பாபு, ஆனந்த் ராகவ், மகுடேஸ்வரன், அண்ணாமலை,

ஆதி, சிவராஜ், சுகுமாரன், பா.கீதா வெங்கட்,

க்ருஷாங்கினி, கலாப்ரியா மற்றும் ஆனந்த விகடன்

17.11.2002 

    









வலியின் ஒலி

வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்

கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை
- மகுடேஸ்வரன்









1 ஜனவரி, 2021

நான் ரசித்த ட்வீட்டர் கவிதைகள் - 3

நான் ரசித்த ட்வீட்டர் கவிதைகள் - 3


சேய் அசைக்கும்
வாய் அசைவிற்கான
மெய்ப்பொருள்
தாய்க்குத் தான் தெரியும்

பாலசுப்ரமணி @balasubramni1

27 டிசம்பர், 2020

நான் ரசித்த ட்வீட்டர் காதல் வரிகள் 3

நான் ரசித்த ட்வீட்டர் காதல் வரிகள் 3


என்னை நேசிக்கிறாள் என்று
புரிந்துகொள்ளணுமாம் அவள் புன்னகையுடன் வெட்கத்தை
கண்டு....!

#வெளிநாட்டுக்காரன்


என்னவாகி
போனதோ என்
எண்ணமெல்லாம்
உன்னை
நினைக்கையில்
உயிர்த்துக்கொள்கிறது
அன்பே..

< ச.ரா. எதார்த்தமானவள்


ஒரு விழி மூடி
மறு விழி திறக்கிறாய்..
இரவும் பகலும்
வந்து வந்து
போகிறது..
#நேசம் 

@tvm82







19 டிசம்பர், 2020

நான் ரசித்த அறிவுமதி, ரவி சுப்ரமணியம் & உத்ராடன் கவிதைகள்

நான் ரசித்த கவிதைகள்

அறிவுமதி, ரவி சுப்ரமணியம் ஜெயந்தி குமார்& உத்ராடன்


கிளி ஜோசியம் பார்ப்பது 
மூட நம்பிக்கைதான்
ஆனால் பரவாயில்லை
கிளி ஜோசியம் பாருங்கள்

இருபத்தி நாலு 
மணி நேரமும்
கூண்டுக்குள்ளேயே
அடைபட்டுக்கிடக்கும்
அந்த சிறகிழந்த கிளிக்கு
சில நிமிஷங்களாவது
விடுதலை கிடைக்கட்டும்.
பாவம், பசியால் வாடும்
அந்த பச்சைக் கிளிக்கு
ஒரு நெல் மணியாவது
கொறிக்கக் கிடைக்கும்

கிளி ஜோசியம் பார்ப்பது 
மூட நம்பிக்கைதான்
ஆனால் பரவாயில்லை
கிளி ஜோசியம் பாருங்கள்

- எஸ். அறிவுமணி

______ ______ ______ ______ ______ ______


பயமில்லை :

அடர்ந்த காட்டின் 
ஊடே பயணம்
எங்கும் இருள்
மிருகங்களின்
உறுமல்கள்
பறவைகளின் அலறல்கள்
வான் தொட முயலும்
மரங்களின்
கிளை உரசும் ஓசைகள்
'ச்சோ'வெனும் அருவி
|
'தளக், தளக்' கெனும் ஆறு
ஆனாலும் மனிதனில்லை
அதனால் 
பயமுமில்லை.

- ரவி சுப்ரமணியம்
---------  ------------------  --------- --------- 



______ ______ ______ ______ ______ ______

கூடு கட்டும் பறவைகள்
வீடு கட்டும் மனிதர்கள்
காடு மலைகளில் விலங்குகள்
ஓடெடுத்து பண்டாரங்கள்
தேவியே தேவியே
திருமாங்கல்யம் பத்திரம்
மூதியே மூதியே
முட்டாள்தனம் விட்டுரணும்
சிங்கார வேலனைக் கும்பிட வேண்டும்
செங்கமலத் தாயாரை சேவிக்க வேணும்
ஜென்மம் தொலைக்க வேணும்
சீக்கிரமே சாவு வந்து சேரணும்

- உத்ராடன்

______ ______ ______ ______ ______ ______


யாரிடம்
இருக்கிறது'.... ?
அந்த பலூன்காரனின்
கடைசி மூச்சடங்கிய
பலூன்...

- ஜெயந்தி குமார்




18 டிசம்பர், 2020

நான் ரசித்த ஞானக்கூத்தன் கவிதைகள்

நான் ரசித்த 
ஞானக்கூத்தன் கவிதைகள்




கொள்ளிடத்து
முதலைகள்
:

 ஒன்றிரண்டு நான்கைந்து
பத்து பத்தாய்
ஒரு நூறா? ஆயிரமா?
கணக்கில் வாரா
 
கொள்ளிடத்தில் மணல்வெளியில்
நடுச்சாமத்தில்
கரைமரங்கள் தூக்கத்தில்
ஆடும் போதில்
ஒன்றிரண்டு நான்கைந்து
பத்து பத்தாய்
ஒரு நூறா? ஆயிரமா?
கணக்கில் வாரா
 
சிறிது பெரிதாய் முதலைக்  கூட்டம்
சற்றும் அமைதி குலையாமல் அவை
பேசிக் கொள்ளும்
 
சில நொடிக்குள் முடிவெடுத்துக்
கலையும் முன்னே
குறுங்காலால் மணலிலவை
எழுதிப் போட்ட
மரும மொழித் தீர்மானம்
என்ன கூறும்?

****************************************************





அம்மாவின் பொய்கள்:

பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்

தவறுகள் செய்தால் சாமி
கண்ணை குத்தும் என்றாய்

தின்பதேற்கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்

ஒரு முறத் தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்

அத்தனை பொய்கள் முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா

அத்தனை பொய்கள் அன்று
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்

தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?

எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென்றெண்ணினாயா?

அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்த்தாய் கருதினாயா?

தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா?

உன் பிள்ளை உன்னை விடால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?