தமிழ்வாணன்,சுஜாதா, பாலகுமாரன், புதுக்கவிதைகள் என்று வயதுக்கேற்ப மாற்றங்களடைந்தது என் வாசிப்பு. ரசித்தவற்றை நோட்டுப் புத்தகங்களிலும், கிழித்து வைத்தும் பத்திரப்படுத்தினேன்.என் சேகரிப்புக்கள் செல்லரிப்பதைத் தடுத்து அவற்றின் ஆயுளை நீட்டிக்கும் வகையில் டிஜிட்டல் உலகிற்குள் பதிவு செய்கிறேன். சிலவற்றை எழுதியவரே கூட மறந்திருக்கலாம். அவர்களின் அனுமதியின்றி பதிவதற்கு மன்னிக்க வேண்டும். அவர்கள் எழுத்துக்களை 25 ஆண்டுகளாக ரசிக்கிறோம் என்பதும் அவர்களுக்குப் பெருமையே.
இந்த வலைப்பதிவில் தேடு
17 ஜனவரி, 2021
"கடலோரக் கவிதைகள்" திரைப்படத்தில் வைரமுத்துவின் கவிதைகள்
கடலோரக் கவிதைகள்
"வேதம் புதிது" திரைப்படத்தில் வைரமுத்துவின் கவிதைகள்
பாரதிராஜாவின் "வேதம் புதிது" திரைப்படத்தில் வைரமுத்துவின் கவிதைகள்
அன்பே !
அந்த நதிக்கறையில்
உன் கைக்குட்டை ஒன்றைக்
கண்டெடுத்தேன் !
அது கைக்குட்டையா?
இல்லை
காதல் தேவதை
தன் ஒரு சிறகை
உதிர்த்து விட்டுப்
போய் விட்டதா?
இது கைக்குட்டைதானா?
இல்லை
கல்யாணப் புடவைக்கு
அச்சாரமா?
நீ
வித்தியாசமானவன்
காதல் கடிதத்தை
நெசவு செய்து அனுப்பியவன்
நீ மட்டும்தான்
இப்படித்தான்
பேச நினைக்கிறேன்
ஏதேதோ அர்த்தத்தில்
ஆனால் என் வார்த்தைகளோ
மௌனத்தின் கர்ப்பத்தில்
கண்ணே !
நான் வேதம் ஓத
ஆசைப்பட்டதே
கடவுளைக் காண அல்ல
கண்மணி !
என் காதலியே !
உன்னைக் காண.
நானோ
ஒரு அரசன் தானம்
கேட்பது போல் யாசிக்கிறேன்
நீயோ
நீச்சல் தெரியாத ஒருத்தி
குளத்தில் குதிப்பது போல்
யோசிக்கிறாய்
அது எப்படி?
உன் குடத்தில் இருந்து தண்ணீரும்
வாயிலிருந்து வார்த்தைகளும்
சிந்துவதேயில்லையே !
ஒரு வார்த்தை சொல்லி விடு !
உன் சொல்லுக்குப் பிறகுதான்
இந்தப் பிரபஞ்சம்
அசைவதா? இல்லையா?
என்று ஆலோசிக்கும்.
பிறை நிலவு
தன் மெளனத்தை மறைக்க
இரவு கூட உறங்கி விட்டது
முன் வைத்த காலை
பின் வைப்பதென்ன
நடுக்கம் பிறக்கின்றதா?
இலைகள் அசையும்
ஒலியில் கூட
இதயம் துடிக்கின்றதா?
அச்சத்தில் பாதி
ஆசையில் பாதி
பெண்மை நடக்கின்றதா?
உள்ளம் எங்கும்
வெள்ளம் ஓடும்
மெளனம் கூட
சப்தம் போடும்
ஜீவன் தவிக்கின்றதா?
தேகம் கொதிக்கின்றதா?
கண்மணி
கண்மணி
உன் முகம் கண்டிடக்
கண்கள் துடிக்கிறது
முல்லை இளங்கொடி போகையில்
என்னுயிர் முள்ளில் நடக்கிறது.
சின்னமணிக் குடம்
சிந்தி வழிந்தது
என்னை அழைக்கிறது
கன்னி
உன் நெஞ்சினில் இல்லை
குடத்தினில் ஈரம் இருக்கிறது
இலையுதிர் காலம் என்பது
இறப்பல்ல
இன்னொரு பொழிப்புக்கான
தொடக்கம்
அஸ்தமனம் என்பது
மரணமல்ல
இன்னொரு உதயத்துக்கான
பதுக்கம்
கோடையில் காய்ந்த நதி
கார்காலத்தில் கரை புரள்கிறது
15 ஜனவரி, 2021
மண்வாசனை படத்தில் வைரமுத்துவின் காதல் கவிதைகள்
அவள் யார்?
யாரவள்?
இந்தக் கிராமத்து நுழைவாயில்
என்னை வரவேற்க வந்த வானவில்லா?
விடிந்தும் விடியாத இரவை
இன்றுதான் பார்த்தேன்
நான்
அவளின் கண்களைச் சொல்கிறேன்!
கிளி வந்து இன்னும்
கொத்திச் செல்லாத அத்திப் பழங்கள்
நான்
அவளின் இதழ்களைச் சொல்கிறேன்!
பளிங்குத் தரையில்
அள்ளி இறைத்த
வெள்ளிக் காசுகள்
நான்
அவளின் சிரிப்பைச் சொல்கிறேன்!
போகப் போக
என் டைரியின்
எழுதப்படாத பக்கங்களிலெல்லாம்
இதை விட
30 டிசம்பர், 2020
நான் ரசித்த ட்வீட்டர் காதல் கவிதைகள்
சிறப்பாய்
எதுவுமில்லை
பிடித்தவர்களின்
கண்களுக்கு முன்னே..
யாவும் அழகே.
29 டிசம்பர், 2020
வாரப் பத்திரிக்கைகளில் வந்த காதல் கவிதைகள் (1989)
வாரப் பத்திரிக்கைகளில் வந்த காதல் கவிதைகள் (1989)
யாசிப்பு:
-
வசந்த
குமாரன்
காதல் விடுதலை:
-
இதய
ராஜா
முத்தம்:
-
இரா.
சுந்தர மூர்த்தி
-
கலா
பிரபாகர்
-
வெற்றி
பேரொளி
-
ஏ.ஆரோக்கியராஜ்
ஞாபகம்
:
-
இளங்கோராஜ்
-
K.ராஜா
சந்திரசேகர்
பெயர் :
-
K.
ராஜா சந்திரசேகர்
உனக்கென்ன
:
-
K.ஜெகதீஷ்
28 டிசம்பர், 2020
காதல் கவிதைகள் -மீரா, அபி, புகழேந்தி, சிற்பி
காதல் கவிதைகள்
- மீரா, அபி, புகழேந்தி &
சிற்பி பாலசுப்பிரமணியம்
நவயுகக்
காதல் :
உனக்கும்
எனக்கும்ஒரே ஊர்
வாசுதேவ நல்லூர்…
நீயும் நானும்
ஒரே மதம்
திருநெல்வேலிச்
சைவப் பிள்ளைமார்
வகுப்புங்கூட…
உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்தக்காரர்கள்…
மைத்துனன்மார்கள்
எனவே
செம்புலப்பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
-
மீரா
(ஊசிகள்)
நீயும்
நானும் :
நீ…
நீ… உன்னைஎங்கோ… என்றோ
பார்த்த நினைவு
காதல் மாளிகை
நிலா முற்றத்தில்
வசந்தங்களின் ஊர்வலத்தை
வேடிக்கை பார்க்கக்
கூடினோமல்லவா …!
நம்மிடம்
சஊகம் அனுப்பிய
வேற்றுமை வெள்ளங்கள்
நம் அன்பின் பனியால்
சமாதியாய் உறைந்த பின்
காலடிச் சத்தத்தால்
வாழ்வின் புதிய தொனிகள்
அறிமுகப்படுத்தினோம்
உறக்கக் கோப்பைகளில்
கன்வு மதுவின்
கண்ணாடிக் குமிழிகளில்
நம் முகங்கள்
ஒரே நேரத்தில்
பல பிறவிகளை
எடுத்ததை
ரசித்திருக்கிறோம்
-
அபி
(மௌனத்தின் நாவுகள்)
ப்ரியமானவளே :
விரிந்த ரோஜா
ஜன்னல் வழியே
தலை நீட்டும்…
குவிந்த இதழில்
மல்லிகை மொட்டுகள்
முறுவலிக்கும்
கெண்டை மீன்கள்
இங்குமங்கும்
பாய்ந்து பாய்ந்து
நீந்தும்,…..
பூப்பஞ்சுக் கரங்கள்
புரியாத கோலங்களில்
புணர்ந்து கொள்ளும்
கால் விரல்கள்
வெட்கம் சிந்தி
நெஞ்சத்தை சூடேற்றும்…
உலகம்
கடுகாய் சிறுத்துக்
காலடியில் கிடக்கும்
சுய நலம்
சும்மா இருக்காமல்
சுண்டி சுண்டி இழுக்கும்
வெட்கம்
நகக் கண்கள் வழியே
நரம்புகளைத் தாக்கும்…
ஓ…
காதல் ஒப்பந்தம்
கையெழுத்தானதாலா...?
-புகழேந்தி (அக்கினிக் குஞ்சுகள்)
20 டிசம்பர், 2020
நான் ரசித்த ட்வீட்டர் காதல் வரிகள் 2
நான் ரசித்த ட்வீட்டர் காதல் வரிகள் 2
- Abukatheeja
தேவ ரகசியத்தை போன்ற
- பாண்டி பிரகாஷ்
![]() | ||||
|
அவள் பொற்கரங்களில்தவழ்ந்ததால்.















































