இரண்டு வெளிநாட்டு வங்கிகளும்
இருக்கும்
அந்தப் பெரிய கட்டிடத்தை
தன் மகனுக்கு அறிமுகப்படுத்தினாள்
அந்த சித்தாள், 'நாங்கள் கட்டியது'
என்று சொல்லி.
-முகுந்த் நாகராஜன்
தமிழ்வாணன்,சுஜாதா, பாலகுமாரன், புதுக்கவிதைகள் என்று வயதுக்கேற்ப மாற்றங்களடைந்தது என் வாசிப்பு. ரசித்தவற்றை நோட்டுப் புத்தகங்களிலும், கிழித்து வைத்தும் பத்திரப்படுத்தினேன்.என் சேகரிப்புக்கள் செல்லரிப்பதைத் தடுத்து அவற்றின் ஆயுளை நீட்டிக்கும் வகையில் டிஜிட்டல் உலகிற்குள் பதிவு செய்கிறேன். சிலவற்றை எழுதியவரே கூட மறந்திருக்கலாம். அவர்களின் அனுமதியின்றி பதிவதற்கு மன்னிக்க வேண்டும். அவர்கள் எழுத்துக்களை 25 ஆண்டுகளாக ரசிக்கிறோம் என்பதும் அவர்களுக்குப் பெருமையே.