இந்த வலைப்பதிவில் தேடு

14 மார்ச், 2026

அல்லாஹு அக்பர் மனுஷ்ய புத்திரன்

அல்லாஹு அக்பர்
மனுஷ்ய புத்திரன்


'அல்லாஹு அக்பர்'
நேற்று இரவு வரை
இறைவனே பெரியவன் எனும் பொருளுடைய
ஒரு வழிபாட்டுச் சொல்லாக அது இருந்தது
இன்றைக்கு அதன் பொருள்
அது மட்டுமல்ல

'அல்லாஹூ அக்பர் '
இன்று ஒரு அரசியல் சொல்லாக மாறிவிட்டது
அது தன் முந்தைய அர்த்தத்தின் கிளையிலிருந்து
தன்னை விடுவித்துக்கொண்டு
ஒரு பறவையைப்போல
பறந்து செல்கிறது

ஒரு சிறு பெண்
தனது சிறிய கீச்சுக்குரலால்
நாடு முழுக்க 
ஒரு எதிர்க்குரலாக மாற்றிவிட்டாள்

'அல்லாஹு அக்பர்' என்றால் என்ன? என்று
பல்லாயிரம் கைகள் கூகுளில் தேடுகின்றன
அது ஒரு மத உணர்வின் வாக்கியம் என
சிலர் பொருள்கொள்ள விழைகின்றனர்
இல்லை
எல்லாவற்றின் அர்த்தமும் மாறுகின்றன
' அல்லாஹு அக்பர்' என்பதன் பொருளும்
ஓரிரவில் மாறிவிட்டது

அல்லாஹு அக்பர் என்றால்
நீதி வேண்டும் என்று பொருள்
அல்லாஹு அக்பர் என்றால்
என்னை அச்சுறுத்த முடியாது என்று பொருள்
அல்லாஹு அக்பர் என்றால்
இது எனது நாடு என்று பொருள்
அல்லாஹு அக்பர் என்றால்
நாம் சம உரிமை கொண்டவர்கள் என்றுபொருள்
அல்லாஹு அக்பர் என்றால்
நாம் தனித்துவமானவர்கள் என்று பொருள்
அல்லாஹு அக்பர் என்றால்
ஒருவர் அடையாளத்தை 
மற்றவர்கள் பாதுகாத்தல் என்று பொருள்
அல்லாஹு அக்பர் என்றால்
தேச பக்தி என்று பொருள்
அல்லாஹு அக்பர் என்றால்
கோழைத்தனத்தின்மேல்
காறி உமிழ்தல் என்று பொருள்
அல்லாஹு அக்பர் என்றால்
அது 'அடிபணிவதென்றால் அல்லா ஒருவனுக்கே'
என்று பொருள்

இன்று 'அல்லாஹு அக்பர்' என்று சொல்ல
ஒருவன் இஸ்லாமியனாக இருக்கவேண்டும் என்பதில்லை
அவன் அல்லாவை வணங்குபவனாக 
இருக்கவேண்டும் என்று கூட
அவசியமில்லை

நீதி நிலவ வேண்டும் என்று விரும்புகிற
எவரும் சொல்லலாம்
'அல்லாஹு அக்பர் '

சமாதானம் வேண்டும் என்று சொல்கிற
எவரும் முழங்கலாம்
'அல்லாஹு அக்பர்'

அநீதிக்கு தலைவணங்கமாட்டோம்
என்று சொல்கிற எவருக்கும் உரியதுதான்
'அல்லாஹு அக்பர்'

அதை ஒரு சிறுபெண்
நூறு அர்த்தங்கள் கொண்ட 
ஒரு வரலாற்றுப் பிரகடனமாக்கிவிட்டாள்


8 2.2022
இரவு 11.01

மனுஷ்ய புத்திரன்

7 செப்டம்பர், 2025

முகுந்த் நாகராஜன் கவிதை




முப்பது கம்பெனிகளும் 
இரண்டு வெளிநாட்டு வங்கிகளும் 
இருக்கும் 
அந்தப் பெரிய கட்டிடத்தை 
தன் மகனுக்கு அறிமுகப்படுத்தினாள் 
அந்த சித்தாள், 'நாங்கள் கட்டியது' 
என்று சொல்லி.

-முகுந்த் நாகராஜன்

27 நவம்பர், 2024

ட்வீட்டர் கவிதைகள் சில


நாட்டியம் ஆடும் 
அவள் 
இரு விழிகளுக்கு 
ரசிகனாய் 
நான்
- வெளிநாட்டுக்காரன்

❤️❤️❤️❤️❤️


அவள் செய்யும் 
சிறு சிறு குறும்புகளும் 
அனைத்தும் 
ஒரு மழலையாக 
காண்கிறேன் 
அவளிடத்தில்
வெளிநாட்டுக்காரன்

💐💐💐💐💐💐💐💐


அவள் கூடவே பிறந்த வெட்கம் தான்
இன்று கொஞ்சம் புதிதாய்
தெரிகின்றது..!

#அமுலுகுட்டி


நினைவெழும் வேளைகளில்
உன்னை சுவாசித்துக்கொள்ள
நீ விட்டுப்போன
உள்ளாடையொன்றை
பத்திரமாக வைத்திருக்கிறேன்
பின்னொரு நாள்
இதைக்கொடு
இதிலென் வாசம் தீர்ந்து போய்விட்டது
நானுனக்கு வேறு தருகிறேன் என்றாய்
இல்லையடி
உன் வாசம் இந்தத் துணியிலில்லை 
இது வெறும் கருவி
அது என் புத்திக்குள் இருக்கிறது

-- யாரோ  (ஜனவரி 6, 2022)




21 நவம்பர், 2024

வைரமுத்துவுக்கு பழைய நண்பனின் கடிதம்

வைரமுத்துவுக்கு பழைய நண்பனின் கடிதம்  

அறிவுமதி







குமுதம் - வார இதழ் கவிதைகள்

குமுதம் - வார இதழ் கவிதைகள்













பழநிபாரதி கவிதைகள்

பழநிபாரதி கவிதைகள்







பொன்மணி வைரமுத்து கவிதை

பொன்மணி வைரமுத்து கவிதை