இந்த வலைப்பதிவில் தேடு

16 செப்டம்பர், 2018

கவிதை ப்ரியனின் கவிதைகள்

என் கிறுக்கல்கள்

மறுக்கத் தெரியா பொய்கள் :
 
நகத்தில் வெள்ளைக் கோடு விழுந்தால்
கோடித் துணி நிச்சயம்

வலது கண் அடிக்கடி துடித்தால் 
நல்ல சேதிக்கு அறிகுறி

காக்கைத் தொடர்ந்து கரைந்தால் 
விருந்தினர் வருகைக்கு முன் அறிவிப்பு.

தொடராய் தெரு நாய் இரவில் அழுதால்
தெருவில் மறுநாள் ஒரு மரணம் உண்டு

கை கால் வலி எனில்
கண் திருஷ்டியே காரணம்

ஆயிரமாயிரம் அடுக்கடுக்காய் 
பொய்களாய் அம்மா சொல்வாள் 

பிறிதொரு நாளில் 
எனது காதலை மறுத்து மறைத்தது
வெடித்து வெளிப்பட 
அழுகையோடு அம்மா 
சொன்னாள்
"பொய் சொன்ன வாய்க்கு
போஜனம் கிடைக்காது"

- அமுது தமிழ் வாசன்

 

பருவங்கள்

மார்கழி மாதம்
பொழியும் பனியை 
சபித்தேன்

ஐப்பசி மாதம்
வருதித்த மழையை
வசைத்தேன்

கடுங்கோடையில் 
எரித்த வெயிலை
திட்டினேன்

காலந்தோறும்
இப்படி ஆனது
எனது பொழுதுகள்

ஆனாலும்
தவறியும், தவறாமலும்
தொடருது பருவங்கள்


                                                                      சூரியனோடு
போட்டியிட்ட
சுடர் வென்றது
இரவிலும் எரிந்து








காத்திருப்பு :

காத்திருந்த பொழுதினில்

கண்ணில் பட்ட கவிதை நூலில்

பிடிச்சுப் போன கவிதைகள் இரண்டை

மனசுக்குள் குறித்துக் கொண்டுமாச்சு !

 

தேடிப் பிடித்த வார்த்தைகள்

சிக்கித் தவிக்க

புதிய கவிதையொன்று

மனசுக்குள் நெய்துமாச்சு !

 

வீணை வகுப்புக்குச் சென்று

வீணாய் என் பொழுதைக்

கழிக்க விட்ட தோழி !

உனக்கெப்படி பொழுது

உருப்படியாய் ஆச்சு ?


பிரதிபலிப்பு:

வண்ணவண்ண
வெளிச்சப் பிரவாகம்
என் மீது விழும்
மண் மீது விழும்
கரு இருட்டு 



மனசு :

முன்னே சென்றால் துரத்திக் கடிப்பேன்

பின்னே போனால் எட்டி உதைப்பேன்

கீழே கிடந்தால் மிதித்து நசுக்குவேன்

மேலேற முற்சித்தால் கால் தூக்கி

மண்ணில் தள்ளுவேன்

கூடவே ஓடி வர வேகமோ தெம்போ உனக்கில்லை

ஒன்று செய்

பேசாது ஒதுங்கி ஓய்வெடு

காத்துக் கிட

ஓடிக் களைத்து நுரை ததும்பும் வாயோடு

வருவேன் வாலாட்டிக் கொண்டு

உன் நிழலில் பதுங்க.


கருத்துகள் இல்லை: