காளிமுத்துப் புலவர் பாடல்கள்
வனக்குத் தளவஞ்சி பூஞ்சோலைத் தஞ்சி வளருமிருதனக்குன்று செய்யுந் தொழில் சொல்லவோ தமியேனைக் கண்டாற்கனக்கும் புளகிக்கும் பாரிக்கும் பூரிக்குங் கண்கறுக்குஞ்சினக்குந் தனக்கு மெனக்கு முண்டாக்குந் தினஞ் சண்டையே. (7)
அவள் என்னை வாட்டி வனக்கும் (வாடச்செய்யும்) தளமாகிய கொங்கைகளை உடைய வஞ்சிப்பெண்ணாகிய பூஞ்சோலைத் தழிஞ்சி (தஞ்சி). அவளிடம் வளர்வது இரண்டு தன(முலை)க் குன்றுகள். அவை செந்நும் தொழிலைச் சொல்லவோ?
அவை தனியே இருக்கும் என்னைக் கண்டால் மேலும் கனதியாகும். புகாங்கிதம் கொள்ளும்.
பருமனாகும்.
பூரிக்கும்.
தன் கண்முனை கறுக்கும்.
என்மீது சினம் கொள்ளும்.
அதற்கும் எனக்கும் ஒவ்வொரு நாளும் சண்டைதான்.
காளமேகப் பாடல்கள்
கரண்டகத்துக்கும் பெண்குறிக்கும்
இட்டிட்டு வாங்குதலால் இன்பவெள்ளை தோன்றுதலால்மட்டிட்டு மூடி மறைக்கையால் - முட்டத்தெருண்டோர்கள் போற்றும் திருமலைரா யன்சீர்க்கரண்டகமும் பெண்குறியாம் காண்.
“முதைச் சுவல் கலித்த முற்றா இளம்புல் / மூதா தை வந்தாங்கு/ விழுந்தே காமம்/ பெருந்தோளோயே” -(குறு: 204) என காமத்தை “மேட்டில் துளிர்த்த முற்றாத இளம் புல்லை முதிய பசுமாடு தனது நாவால் மெல்லத் தடவிக் கொடுப்பது போன்று காமம் புதியது” என அக்காலச் சமுதாயம் காமத்தை மிகவும் இயல்பாய் ஏற்றுக்கொண்டது. புணர்ச்சி அதனால் கிடைக்கும் சுகம் இயற்கையானது. தவிர்க்க இயலாதது. எவ்விதத்திலும் தீயதாக இருக்க முடி யாது.
........
இன்னொரு போர் வீரன் தன் மனைவியிடம் சொன்னான். பெண்ணே உன்னை நான் இரவு வேளையில் முன்பு கட்டித் தழுவும் போதெல்லாம் என் நகத்தினால் காயங்கள் உன் உடலில் ஏற்பட்டு விடும். அந்தக் காயங்களை ஒரு செல்வமும் இல்லாதவன் திடீரென்று பெற்ற புதையலைப் போல யாரும் இல்லாத இடத்தில் போயிருந்து பார்த்துப் பார்;தது மகிழும் உன் அன்பு எனக்குத் தெரியாதா? கதவைத் திற என்றான் கலிங்கத்துப் பரணியில்.
முலைமீது கொழுநர்கைந் நகமேவு குறியை
முன்செல்வ மில்லாத அவர்பெற்ற பொருள்போல்
கலைநீவி யாரேனு மில்லாவி டத்தே
கண்ணுற்று நெஞ்சங் களிப்பீர் கடைதிறமினோ
(சயங்கொண்டான் – கலிங்கத்துப் பரணி)
இந்தச் செய்தியை எங்கள் தங்க ராஜா படத்துக்குப் பாட்டு எழுதும் போது கையில் எடுக்கின்றார் கண்ணதாசன். இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேளை என்றபாட்டி இப்படி எழுதுவார் கண்ணதாசன்.
காலை வேளையில் காயங்கள் பார்த்துக்
களிப்ப தென்பது கவிதையின் விளக்கம்
கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல்
காணப் போவதோ மஞ்சம்
(கண்ணதாசன் – எங்கள் தங்க ராஜா)
.....
சோழ வீரர்கள் போர் முடிந்து வந்து கதவைத் தட்டுகிறார்கள். கதவைத் திறக்க மறுக்கும் மனைவியரிடம் பாடும் சில பாடல்களைப் பார்க்கலாம்.(குறிப்பு: பாடலின் அசல் வடிவத்தையும், எனக்குப் புரிந்த வரையில் சீர் பிரித்தும் தருகிறேன்.)
அளகபாரம் இசை அசைய மேகலைகள் அவிழ ஆபாரணம் இவை எ(ல்)லாம்
இளக மாமுலைகள் இணையறாமல் வரும் இயனலீர் கடைகள் திறமினோ
இதுதான் பாடலின் வியாக்கியானம்,
விரிந்த கூந்தல் இசைக்கு நடனமாடுவது போல் அசைய, கணவர்தம்மைப் பிரிந்ததனால் இளைத்த இடையில் அணிந்திருக்கும் மேகலை அவிழ, மற்ற ஆபரணங்களும் கழண்டு விழ கொங்கைகள் இரண்டும் இணையாமல் நடந்து வரும் பெண்களே கதவைத் திறங்கள்!
இதை எப்படிக் கற்பனை செய்திருப்பார்? கதவிடுக்கின் வழியாகக் கண்ணை இடுக்கி உள்ளே நடந்து வரும் பெண்ணைப் பார்த்தாரா?
......
கடைதிறப்பில் மகளிரின் இதழும், இதழ் ரசமும் காதலர்தம் உணர்ச்சியைப் பெருக்கும் விதத்தில் வர்ணிக்கப்படுகிறது. மகளிரின் இதழ் ரசம் ‘செங்கனி வாய்மருந்து’ (7) எனப்படுகிறது. மகளிர் இதழின் மது பருகி, மதிமயங்கிக் கிடப்பர் என்பதை,
“………. வாயிதழ் வெளுப்பவே,
அதரபானம் மதுபானமாக அறிவழியும் மாதர்” (17) என்றும்,
“வாயின் சிவப்பை விழிவாங்க
மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்க” (37) என்றும்
இதழ் முத்தம் பருகப்படுகிறது. தலைவனோடு கலவி இன்பத்தில் ஈடுபடும்பொழுது, இதழின் செந்நிறமெல்லாம் விழிக்கு ஏறிவிடும், விழியின் வெண்மை இதழுக்கு மாறிவிடும் என்று வர்ணிக்கப்படுகிறது.
மகளிரின் தொப்புள் ‘உந்திச்சுழி’ எனப்படுகிறது. அதனிலிருந்து முளைத்தெழுந்த உரோமக்கொடியில் இரண்டு ஸ்தனங்கள் (தாமரைகள்) பூத்திருக்கின்றன.
“உந்திச் சுழியில் முளைத்தெழுந்த
உரோமப் பசுந்தாள் ஒன்றில் இரண்
டந்திக் கமலம் கொடுவருவீர்” (கடை. 33)
ஃ. . ......
முதற்பாடல் காதலியரின் உடலழகை வர்ணிக்கின்றது:
சூதளவு அளவேனும் இளமுலைத்
துடியளவு அளவெனும் நுண் இடைக்
காதளவு அளவெனும் மதர்விழிக்
கடலமுது அனையவர், திறமினோ!
அந்தக் காலத்தில் சூதாடும் கருவி ஒன்றிருந்தது. அந்தக் கருவியின் அளவை ஒத்தது இளமுலை. உவமை என்பதே உவமைச் சொல்லப்படும் பொருளை விளக்கத்தான். ஆனால் இங்கு நிலைமை தலைகீழாக இருக்கிறது. துடி எனில் உடுக்கை. தமருகம் என்றும் ஒரு சொல்லுண்டு. அந்த உடுக்கையின் அளவை ஒத்தன நுண்ணிய இடை. விழிகள் காதளவு நீண்டவை. எத்தகு விழிகள் எனில் செருக்குக் கொண்ட விழிகள். மதர், மதர்த்த, மதம் கொண்ட எனில் செருக்குக் கொண்ட எனப் பொருள். கடலின் அமுதினை ஒத்த பெண்களே, கதவைத் திறவுங்கள்.
கலவியின் களி மயக்கத்தால் உடுத்திருந்த துணி அகன்று கிடக்க, கலைமதியின் நிலவைத் துகில் என்று எடுத்து உடுப்பீர்கள். நீண்ட பொற்கதவம் திறக்க மாட்டீர்களா என்கிறது ஒரு பாடல்.
கல்விக் களியின் மயக்கத்தால்
கலை போய் அகலக் கலைமதியின்
நிலவைத் துகில் என்று எடுத்து உடுப்பீர்
நீள்பொன் கபாடம் திறமினோ!
என்பது பாடல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக