இந்த வலைப்பதிவில் தேடு

19 நவம்பர், 2011

நான் ரசித்த சிறு கவிதைகள்





நான் ரசித்தவற்றை எழுதிய கவிஞர்களுக்கு நன்றி !

சந்தர்ப்பங்கள் :
எடுப்பதற்குள்
நின்று விடும் தொலைபேசி மணி

சற்று வெளியே சென்ற போது
அப்பொழுதுதான் வந்து விட்டுப் போன யாரோ

அந்த முகம்தானா என்று
நினைவூட்டிக் கொள்வதற்குள்
சிக்னலில் விழும் பச்சை

வந்து சேர்வதற்கு
சற்றுமுன் எரியூட்டப்பட்ட உடல்

எப்போதும்
ஒரு கணம்தான் தாமதமாகிறது

- மா.பு.
-------------------------------------------------
ஆட்சி மாற்றம் :

எச்சில் வடிந்த
தலையணையை
திருப்பிப் போட்டேன்
அந்தப் பக்கம்
அதைவிட அசிங்கம் ?

-கவிஞர் அறிவுமதி

---------------------------------------------------

காதல் :

இந்த நதியில்
மட்டுமென்ன...
மீன் தூண்டில் போட
மீனவன்
மாட்டிக் கொள்கிறான்
- மருதுர் மோகன்.

---------------------------------------------------

பயம் :
இறந்த பின்னர்
தாஜ்மஹால் வேண்டாம்
இருக்கும் பொழுதே
தாலியைக் கட்டுங்கள்...
அது போதும்...
- தஞ்சைப்ரியா
--------------------------------------------------
பெண்ணே !:
நிலவைத்தானே
பார்த்தேன்
மனதில் எப்படி இருள் வந்தது ?
- ராஜ்குமார்
---------------------------------------------------




அழகு:

அவள் அழகு
சாதரண அழகுதான்
ஆனால் எனக்கு
தெய்வீக அழகு...

அவள் வாக்கு
சாதரண வாக்குதான்
ஆனால் எனக்கு
தேவ வாக்கு...

அவள் பெண்
சாதரணப் பெண்தான்
ஆனால் எனக்கு
தேவதை...
- ராஜமுருகு பாண்டியன்
----------------------------------------------------

*மற என்றாய் !
மறந்து போனது
மறப்பது

*இன்று நீ தரும்
பரிசென்ன தெரியுமா...
“உனக்காக எழுதி
நானே வைத்துக் கொள்ளும்
இந்தக் கடிதம்”

*சைக்கிள் ஓட்டக்கற்றுத் தரச்சொல்லி
வேண்டுமென்றே என் மேல்
சாய்ந்த போதா நுழைந்திருப்பாய்
என்னில்

*அதான்
பிடிக்கவில்லை என்றாயே
பிறகேன்
வந்து வந்து போகிறாய்
என்னுள்
- கார்முகில்
---------------------------------------------
மழையில் நனைய ஆசைதான்
சட்டைப்பைக்குள்....
அவள் கடிதம் !
-தங்கம் மூர்த்தி
--------------------------------------------
புரையேறும் போது
நினைத்துக் கொள்வேன்
நீ நினைப்பதாக !
- சிவ பாரதி
--------------------------------------------
சிறகிலிருந்து
பிரிந்த இறகு ஒன்று
காற்றின் தீராத
பக்கங்களில்
ஒரு பறவையின்
வாழ்வை
எழுதிச் செல்கிறது.
-தருமு அரூப் சிவராம்




கருத்துகள் இல்லை: