இந்த வலைப்பதிவில் தேடு

13 நவம்பர், 2011

சுதந்திரம் - கவிதைகள்



நான் ரசித்தவை கவிதை 2

சுதந்திரம் என்ற தலைப்பில் நான் வாசித்தவற்றில் ரசித்தவற்றை இங்கே பதிக்கிறேன்

சுதந்திரம் :

சும்மா இருப்பதற்கு
இங்கே
சுதந்திரம் உண்டு !
சுறுசுறுப்பாய்
இருப்பதென்றால்
அதற்கு
அரசாங்க
அனுமதி வேண்டும் ! – மு.மேத்தா
**********************************
கூண்டு திறந்தது
சிறகடித்துப் பறக்கவா ?
ம்..ம்..ம்
சீட்டெடுக்க..- அக்னிப்புத்திரன்


**********************************

இரவில் பெற்றோம்
இன்னும் விடியவேயில்லை
- அரங்கநாதன்
**********************************
1947 ஆகஸ்டு 15:
அவன்
ஒரு
பட்டு வேட்டி பற்றிய
கனவில் இருந்த போது –
கட்டியிருந்த கோவணம்
களவாடப்பட்டது.
- வைரமுத்து.

**********************************

இரண்டடிக் கயிற்றால்
முளையுடன் கட்டப்பட்டுள்ள
மாடு கதறியது.
மா...மா..மா....
எங்கிருந்தோ வந்த ஒருவன்
இரண்டடிக் கயிற்றை அவிழ்த்து
இருபதடிக் கயிற்றைக் கட்ட
மாடு இன்று துள்ளுகிறது
சுதந்திரம் அடைந்து விட்டதாய் !

............................

பழத்தினை
நறுக்க வாங்கிக்
கழுத்தினை
அறுத்துக் கொண்டோம்

......................

சுவாச தாங்களால்
உயிர்ப்பித்தோம் உன்னை
சுதந்திர தேவி !
உன் கோயிலே
எங்களின் சிறையானது

....................

எங்கள் விலங்குகள்
கழற்றப்படவில்லை.
சாவிகள்தாம் கை மாறின

..................

உன் பஜனைப் பாடல்
உதடுகளை அரிக்கிறது

..................

உன் திருவிழா நாளில் மட்டும்
பிச்சைப் பாத்திரங்களை
மகுடங்களாக அணியும்
‘ராஜபார்ட்டுக்கள்’ நாங்கள்

- கவிக்கோ. அப்துல் ரகுமான்

கருத்துகள் இல்லை: