இந்த வலைப்பதிவில் தேடு

12 நவம்பர், 2011

நான் ரசித்தவை-வல்லிக்கண்ணன் கவிதை



நான் ரசித்தவை 1



விதி :

நடந்தே அழியணும்

வழி;
கொடுத்தே தீரணும்
கடன்;
செய்தே அழியணும்
வேலை;
அழுதே ஒழியணும்
துக்கம்;
வாழ்ந்தே தீரணும்
வாழ்வு;
இதுவே உலகின் நியதி


நாய் அடிக்கடிக் குரைக்கிறது
உன் குறை கூறல் போல

இரவுகளில் ஆந்தைகளின் அலறல்
என் தூக்கத்தைக் கெடுக்கிறது
உன் முணுமுணுப்புப் போல

என் முன்னே நீ இல்லையெனினும்
என் அன்பே உன்னை நான்
எப்படி மறப்பேன்
 


- வல்லிக்கண்ணன்

கருத்துகள் இல்லை: