இந்த வலைப்பதிவில் தேடு

14 நவம்பர், 2011

கவிஞர் மு.மேத்தாவின் காதல் கவிதைகள் :





அவளைக்
கண்டவுடன்
என் கையில் கட்டியுள்ள
கடிகாரம் கூட
நின்று விடுகிறது
அதற்கும் சேர்த்துத்தான்
அடித்துக் கொள்கிறதே
இதயத்தினுள் அலாரம்


*************************   *************************

கத்தி மாதிரிக்
கண்கள் - என்றேன்
என் இதயத்தின் மீதுதான்
தீட்டி பார்க்கப் போகிறாய்
என்பதைத்
தெரிந்து கொள்ளாமல்


எனக்குத் தெரியும்
நீ விரும்புவது என்னையல்ல
என் கவிதைகளைத்தான்
என்று
ஆனால்
உனக்குத் தெரியுமா
உன்னை விரும்புவது
என் கவிதைகளல்ல
நான்தான்
என்று?

                                                        *************************

படிப்பதற்கு
உனக்குப்
பயன்படும் உன்னுடைய
கண்களைத்தான்
உன்னை நான்
படிப்பதற்கும்
பயன்படுத்துகிறேன்

**************************


வேறு யாரோ 
ஒருவனுடன் 
நிச்சயதாம்பூலம்
நிகழ்த்திக் கொண்டிருக்கிற
உன் பெற்றோர்
உணர்ந்து கொள்ளட்டும்
நான் 
தேவதாஸ் அல்ல
பிருதிவிராஜன்
**************************



வீணையைக் 
கையிலேந்தி 
நின்றிருந்தாய்.....
மெல்ல நெருங்கி
‘மீட்டட்டுமா?..’
என்றேன்
சரியெனத் 
தலையசைத்துச்
சம்மதித்தாய்.
உனக்குத் தெரியும்
வீணை வாசிக்க
எனக்குத்
தெரியாது 
என்பது.


                                                     *************************

கருத்துகள் இல்லை: