இந்த வலைப்பதிவில் தேடு

16 நவம்பர், 2011

பாகம் 2 கவிஞர் மு.மேத்தாவின் காதல் கவிதைகள்



கவிஞர் மு.மேத்தாவின்
காதல் கவிதைகள் பாகம் 2 :
(தொடர்ச்சி...)


பார்வை : 

சுற்றுவதை நிறுத்து
சுற்றுவதை நிறுத்து
என்று
அப்பா சொன்னார்
பையனிடம்

பக்கத்து வீட்டுக்
காரி(கை)யின் பார்வையில்
சாட்டை இருக்கிறது
பம்பரம்
என்ன செய்ய்ம்
பாவம்.


பாடங்கள் முடியவில்லை:
புத்தகத்தைக்
கையில் வைத்திருந்த
அவளைப்
பார்த்த பிறகுதான்
புரிந்தது...
நான்
படிக்க வேண்டியது
எவ்வளவோ
பாக்கி இருக்கிறது
என்று.


எங்கிருக்கிறாய்?:

நீ என்
கவிதைகளை ரசிப்பதாகக்
கூறிய பிறகு
என் கவிதைகளெல்லாம்
உன்னை மட்டுமே
ரசிக்கத் தொடங்கி விட்டன.


படித்து முடிந்ததும்
கொடுத்ததைத்
திருப்பி வாங்கிக் கொள்வதற்கு
இது
புத்தகமல்ல
இதயம்


கை நழுவ
விட்டால்தான்
உடைந்து போகும்
என்பதற்கு
இது
கண்ணாடியல்ல
மனது


மாபெரும் கூட்டத்தின்
மத்தியிலும்
என் கண்கள்
கேட்டுக் கொண்டே
இருக்கின்றன...
நீ
எங்கிருக்கிறாய் என்று.


அருகில் நீ இருந்த போது
என்னையே கேட்டுக் கொண்டேன்
“நான் யார்?” என்று....
இங்கிருந்து நீ
போய் விட்ட பிறகு
இவர்கள் என்னைக் கேட்டார்கள்
“நீ யார்?” என்று!


புதையல்

கண்களால் நீ எழுதும்
கவிதைகளுக்கு
அர்த்தம் புரியாமல்
நான்
அவதிப்படுகிறேன்
அருள்கூர்ந்து
உன்னுடைய
கைகளால்
உரை எழுத மாட்டாயா?


சிரிப்பில் ஒரு நெருப்பு:

அவளிடம்தான்
என்னை
அடகு வைத்தேன் !
கடைக்கண் பார்வைக்கும்
கண நேரப் புன்னகைக்கும்
அவளிடம்தான்
என்னை
அடகு வைத்தேன் !

இரண்டாம் நாளே
ஏலம் போட்டு விட்டாளே !
அவளுடைய வீட்டில்
என் பெயர்
அடிபடவேண்டுமென்று
ஆசைப்பட்டேன்...
நானே தெருவில்
அடிபடும்படி
செய்து விட்டாளே !
வீதியில் தடுமாறி
விழுந்த போது கேட்டார்கள்:
‘எது உன்னை இடறியது?’

எப்படி சொல்ல முடியும்...
எதிரே வந்த
ஒரு பெண்ணின்
புன்னகைதான் என்னை
புரட்டி விட்டதென்று !

@ தீக்குச்சிகளைத்
தேடிக் கொண்டிருக்காதீர்கள்
அவளிடம் கேளுங்கள் ....
சிரிப்பிலிருந்து
நெருப்பை உண்டாக்குவது
எப்படி என்று !

@என் கல்லறைக்கு
வரும்போதாவது
அவளைப் பார்த்து
யாராவது கேளுங்கள் .....
அந்தப் புன்னகைக்கு
அர்த்தம் என்னவென்று !


************************
ஆகாய தேவதை
பூமியின் பாடகன்


ஒவ்வொரு நாளும்
வார்த்தைகளெல்லாம் வந்து
வரம் கேட்கின்றன.
உன்னைப் பற்றி எழுதும்
கவிதைகளில்
ஒதுக்கி விடாமல்
தம்மை
உபயோகித்துக் கொள்ளுமாறு...

@
உனக்காகச்
சீவி சிங்காரித்து
அனுப்பி வைக்கும்போது
வளமில்லாத
எந்த வார்த்தையும்
வயதுக்கு வந்து விடுகிறது.

உதைக்கும் நினைவுகள் :

உன்னிடம் நான்
வந்த போது
உன் கடந்த காலமும்
என் எதிர்காலமும்
மறந்து போய் விட்டது. !

உன்னுடைய நினைவுகள்
என்னை உதைத்து விளையாடுகின்றன
பந்தாக மாறி ...
நான்
படுபாடு படுகிறேன்
உற்சாகமாய் கைதட்டி
ரசிப்பவர் கூட்டத்தில்
ஒருத்தியாக
நீயும்
உட்கார்ந்திருக்கிறாய்...


**********************

உன்னுடைய அழைப்புக்கள்:
..................................
பட்டிக்காட்டுத்தன்மான
பெயர்தான்
உன்னுடைய பெயர்....
அதுதான் எனக்கு
நாகரீகத்தின்
ஞாபகச் சின்னமாகி விட்டது...
நைல் நதி மாதிரி !

தொலைவில் நீ
இருந்த போது
என் அருகில் இருப்பது போல்
தோன்றியது...
அருகில் வந்த பிறகுதான்
நீ
வெகு தொலைவில் இருப்பதே
விளங்கியது !


**********************


மலர்கள் கோபித்துக் கொள்கின்றன :

..........................
அகப்பட்டுக் கொள்ளத்தான்
இந்த மீன்
அலைகிறது !
தொட மாட்டோம் என்று
தூண்டில்கள்
சொல்லிவிட்ட பிறகும் !

......................................

**********************

இது கேள்விகள் கிடைக்கும் இடம் :

........................................
இதென்ன
இந்த விழிக்குளம்...
மீனயும் காட்டுகிறது..
தூண்டிலையும் நீட்டுகிறது !



5 கருத்துகள்:

முன்பனிக்காலம் சொன்னது…

அருமையான வலைப்பூ. உங்களை எப்படி பின் தொடர்வது? followers இற்கான கஜெட் ஐ இணைத்தால் நல்லது

Unknown சொன்னது…

கவிதையின் கடைசி வரிகள் மிகவும் அருமை

Unknown சொன்னது…

கவிதையின் கடைசி வரிகள் மிகவும் அருமை

NOORIE சொன்னது…

நன்றி

NOORIE சொன்னது…

நன்றி