இந்த வலைப்பதிவில் தேடு

25 ஜனவரி, 2021

கமலஹாசன் கவிதைகள்

கமலஹாசன் கவிதைகள்


மனித வணக்கம்

தாயே, என் தாயே!

நான்

உரித்த தோலே

அறுத்த கொடியே

குடித்த முதல் முலையே,

என் மனையாளின்

மானசீகச் சக்களத்தி, சரண்.

 

தகப்பா, தகப்பா!

நீ என்றோ உதறிய மை

படர்ந்தது கவிதைகளாய் இன்று

புரியாத வரியிருப்பின் கேள்!

பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.

 

தமயா, தமயா!

என் தகப்பனின் சாயல் நீ

அச்சகம் தான் ஒன்றிங்கே

அர்த்தங்கள் வெவ்வேறு!

 

தமக்காய், தமக்காய்!

தோழி, தொலைந்தே போனாயே

துணை தேடி போனாயோ?

 

மனைவி, காதலி!

நீ தாண்டாப் படியெல்லாம்

நான் தாண்டக்குமைந்திடுவாய்

சாத்திரத்தின் சூட்சுமங்கள் புரியும்வரை.

 

மகனே, மகனே!

என் விந்திட்ட விதையே

செடியே, மரமே, காடே

மறுபிறப்பே

மரண சௌகர்யமே, வாழ்!

 

மகளே, மகளே!

நீயும் என் காதலியே

எனதம்மை போல..

எனைபிரிந்தும் நீயின்பம் காண்பாயா?

இல்லை,

காதலித்த கணவனுக்குள் எனைத் தேடுவாயா?

 

நண்பா, நண்பா!

நீ செய்த நட்பெல்லாம்

நான் செய்த அன்பின் பலன்

இவ்விடமும் அவ்விதமே.

 

பகைவா, பகைவா!

உன் ஆடையெனும் அகந்தையுடன்

எனதம்மணத்தைக் கேலி செய்வாய்.

நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே

உனதம்மணத்தின் விளம்பரங்கள்.

 

மதமென்றும், குலமென்றும்

நீ வைத்த துணிக்கடைகள்

நிர்மூலமாகி விடும்

நிர்வாணமே தங்கும்.

 

வாசகா, வாசகா!

என் சமகால சகவாசி,

வாசி!

புரிந்தால் புன்னகை செய்.

புதிரென்றால் புருவம் உயர்த்து.

பிதற்றல் எனத்தோன்றின்

பிழையும் திருத்து.

எனது கவி உனதும்தான்.

 

ஆம்,

நாளை உன் வரியில் நான் தெரிவேன்

 கோவை வானம்பாடிக் கவிஞர் புவியரசு அவர்களின்

கவிதைநூல் வெளியீட்டு விழாவில் கமல் வாசித்த கவிதை இது

18 ஜனவரி, 2021

எம்.ஜி.ஆருக்கு கவிஞர் வைரமுத்துவின் கவிதாஞ்சலி

எம். ஜி. ஆருக்கு கவிப்பேரரசு வைரமுத்துவின் 
கவிதாஞ்சலி

ரோஜாக்களே !
இனி
யாருக்காக பூப்பூப்பீர்கள்?

அலைகளே !
இனி
யாருக்காகக் கை தட்டுவீர்கள்?

சாலைகளே !
இனி
யார் வருகைக்காகக்
காத்திருப்பீர்கள்

ஒரு
புன்னகை ராஜாங்கம்
போய் விட்டது !

கவிஞர்களின் காதலன்
காலமாகி விட்டான் !

வற்றிப் போகாத
வரலாறே !

உன்னை 
நேசிக்கும் நெஞ்சங்கள்
நடிப்பில் கூட
உன்னை
இறக்க விட்டதில்லையே !
நிஜத்தில் இறந்தாயே
நியாயமா?

தென்னகத்தையே
சென்னைக்கு வரவழைத்து விட்டு
நீயெங்கோ போய் விட்டாய்
நீதியா?

உன் தொண்டர்கள்
மாலைகள்தான்
வாங்கினார்கள்

மாலையில் வாங்கிய
மாலைகள்
காலையில் பார்த்தால் 
மலர் வளையல்கள் !

ஒரு நாள் -
எனக்கு நீ
விருதளித்தாய் !
தங்கம்தான் விருதென்று
எல்லோரும் நினைத்தார்கள்
நான் மட்டும் நினைத்தேன்
உன்
விரல் தொட்டதே
விருதென்று


உன் வயது
ஒரு நூற்றாண்டுக்குள் ;
உன் வாழ்க்கையோ
சில நூற்றாண்டுகள்

காலடிச் சுவடுகள்
அழிந்து விடும் !
காலச் சுவடுகள்
அழிவதில்லை !

கிராமத்துக் காற்றில்
கலந்திருக்கும் உன் கீதங்கள் !

வெள்ளித்திரையில் நீ ஓட்டிய
குதிரைகளின்
குளம்படிச் சத்தம் !

காது மடல்களில்
ஒட்டிக் கொண்டிருக்கும்
உன் உச்சரிப்பு !

இதயச் சுவர்களில்
எழுதப்பட்டிருக்கும்
உன்
ராஜ சித்திரம் !

பாமர மக்களை
நிஜமாய் நேசித்த
நேசம் !

இவையெல்லாம் உன்
காலச் சுவடுகள்

காலடிச் சுவடுகள்
அழிந்து விடும் !
காலச் சுவடுகள்
அழிவதில்லை !

யாருடைய 
சாவுக்கும்
மரணம் மட்டும்
வருத்தப்படுவதில்லை

ஒரு நாள்
மரணத்திற்கு
மனசாட்சி வந்தால்
உன்னிடம் மட்டும் வந்து
மன்னிப்பு கேட்கும்





17 ஜனவரி, 2021

"கடலோரக் கவிதைகள்" திரைப்படத்தில் வைரமுத்துவின் கவிதைகள்

கடலோரக் கவிதைகள் 
திரைப்படப் பாடல் ஒலிநாடாவில்
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வரிகளை      பாரதிராஜா தன் குரலில் வாசித்த கவிதைகள்


உன்னைப் பார்த்த பிறகுதான்
நான்
என் தோட்டத்தில்
பூச்செடிகள்
வைக்க ஆரம்பித்தேன்

என் வாழ்க்கைக்குள்
தென்றலாய்
நீ வந்த பிறகுதான்
நான்
திறக்க மறந்த
ஜன்னல்களையெல்லாம்
திறந்து வைத்தேன்

இது என்ன நியாயம்?
எனக்கு 
சுவாசிக்கக் கற்றுக்
கொடுத்து விட்டு
காற்றே !
உன் திசையை
இப்போது
ஏன் திருப்பிக் கொண்டாய் ?

இருண்டு கிடந்த
என் மனதில்
விளக்கேற்றினாய் !
இப்போது
என் கண்களையே
களவாடிக் கொண்டாயே !
என் கண்கள் தான்
நீ ஏற்றிய
விளக்குக்கு விலையா?

ஏன் பைங்கிளியே !
நீ
எவ்வளவுதான்
பறந்தாலும்
வானத்தின் விளிம்பிற்கு
வெளியே போக முடியாது
கிளியே !


காதல் -
ஒரு ரகசிய மழை
பாலைவனங்களையெல்லாம்
பிருந்தாவனங்களாக்கி விடுகிறது.

காதல் நதி
மனமெங்கும்
கலகலவென்று பரவும் போது
அது 
கரும்பாறைகளைக் கூட
கரைத்து விடுகிறது
இதுதான் காதலா?

மனதுக்குள்
இப்படி ஒரு
மாயப் பிரவேசம் இருக்கிறதா?

ஏ காதலே !
ஒரே நாளில்
உடம்பெல்லாம்
லட்சம் சிறகுகளை முளைக்க
       வைத்து விட்டாயே !

நீ போட்ட மந்திரத்தில்
எந்திரத்திலெல்லாம்
பூ பூக்க ஆரம்பித்து விட்டதே !


நிறைவேறிய காதல்
வார்த்தையாகிறது !
நிறைவேறாத காதல்
கவிதையாகிறது !

காதல் -
வார்த்தைகளை விட
மெளனத்தையும்
கண்ணீரையும்தான்
அதிகமாக நேசிக்கிறது !

காதல் -
தன்னைப் பேசுவதில்லை
அதனால்தான்
அது பேசப்படுகிறது.
அதோ !
அவனது தோட்டத்தில்
மழை பொழிய வந்த மேகம்
இடியை மட்டும்
இறக்கி விட்டுப் போய்க்
கொண்டிருக்கிறது


எல்லா மொழியிலும்
அதிகமாக எழுதப்பட்ட
வார்த்தை
காதல் தான் !
ஆனால்
எல்லா தேசங்களிலும்
தடை செய்யப்பட்ட
சொல்லும்
காதல் தான் !
சொல்லப்படாத கவிதை
மொழியின் நஷ்டம் !
சொல்லப்படாத காதல்
சொர்க்கத்துக்கே நஷ்டம் !
ஏ பேதைப் பெண்ணே' !
நீயாவது சொல்லி விடேன்

காதலையும்
கர்ப்பத்தையும்
மாராப்புப் போட்டு
ஏன்
மறைக்கப் பார்க்கிறாய் ?


"வேதம் புதிது" திரைப்படத்தில் வைரமுத்துவின் கவிதைகள்

பாரதிராஜாவின் "வேதம் புதிது" திரைப்படத்தில் வைரமுத்துவின் கவிதைகள்


அன்பே !
அந்த நதிக்கறையில்
உன் கைக்குட்டை ஒன்றைக்
கண்டெடுத்தேன் !
அது கைக்குட்டையா?
இல்லை
காதல் தேவதை
தன் ஒரு சிறகை
உதிர்த்து விட்டுப்
போய் விட்டதா?

இது கைக்குட்டைதானா?
இல்லை
கல்யாணப் புடவைக்கு
அச்சாரமா?

நீ
வித்தியாசமானவன்
காதல் கடிதத்தை
நெசவு செய்து அனுப்பியவன்
நீ மட்டும்தான்

இப்படித்தான்
பேச நினைக்கிறேன்
ஏதேதோ அர்த்தத்தில்
ஆனால் என் வார்த்தைகளோ
மௌனத்தின் கர்ப்பத்தில்


கண்ணே !

நான் வேதம் ஓத
ஆசைப்பட்டதே
கடவுளைக் காண அல்ல
கண்மணி !
என் காதலியே !
உன்னைக் காண.

நானோ
ஒரு அரசன் தானம்
கேட்பது போல் யாசிக்கிறேன்
நீயோ
நீச்சல் தெரியாத ஒருத்தி
குளத்தில் குதிப்பது போல்
யோசிக்கிறாய்

அது எப்படி?
உன் குடத்தில் இருந்து தண்ணீரும்
வாயிலிருந்து வார்த்தைகளும்
சிந்துவதேயில்லையே !

ஒரு வார்த்தை சொல்லி விடு !
உன் சொல்லுக்குப் பிறகுதான்
இந்தப் பிரபஞ்சம்
அசைவதா? இல்லையா?
என்று ஆலோசிக்கும்.


ஊர் ஒடுங்கி விட்டது !
பிறை நிலவு 
தன் மெளனத்தை மறைக்க
முகிலை இழுத்து 
முக்காடு போட்டுக் கொள்கிறது!

நட்சத்திரங்களை 
காவலுக்கு வைத்து விட்டு 
இரவு கூட உறங்கி விட்டது
நீ மட்டும் உறங்கவில்லை.!


நீ இமைக்கும் சப்தம் தான்
எனக்குக் கேட்கிறதே!
என் இதயத் துடிப்பு
உனக்குக் கேட்கிறதா?


வெளியே வா கிளியே !
என் இமைகளும், விழிகளும்
ஒரு உடன்படிக்கைக்கு வராமல்
அடம் பிடிக்கின்றன !

இன்று நீயும், நானும்
சந்திக்கா விட்டால்
இந்த இரவு
ஒரு பகலைச் சந்திக்காமலேயே
போய் விடும் !

உன்னை எண்ணி உள்ளம் வாடும் 
கண்கள் இரண்டும் சண்டை போடும்

முன் வைத்த காலை
பின் வைப்பதென்ன
நடுக்கம் பிறக்கின்றதா?

இலைகள் அசையும்
ஒலியில் கூட
இதயம் துடிக்கின்றதா?

அச்சத்தில் பாதி
ஆசையில் பாதி
பெண்மை நடக்கின்றதா?

உள்ளம் எங்கும்
வெள்ளம் ஓடும்
மெளனம் கூட
சப்தம் போடும்
ஜீவன் தவிக்கின்றதா?
தேகம் கொதிக்கின்றதா?

கண்மணி
கண்மணி
உன் முகம் கண்டிடக்
கண்கள் துடிக்கிறது
முல்லை இளங்கொடி போகையில்
என்னுயிர் முள்ளில் நடக்கிறது.
சின்னமணிக் குடம்
சிந்தி வழிந்தது
என்னை அழைக்கிறது
கன்னி
உன் நெஞ்சினில் இல்லை
குடத்தினில் ஈரம் இருக்கிறது

இலையுதிர் காலம் என்பது
இறப்பல்ல
இன்னொரு பொழிப்புக்கான
தொடக்கம்
அஸ்தமனம் என்பது
மரணமல்ல
இன்னொரு உதயத்துக்கான
பதுக்கம்
கோடையில் காய்ந்த நதி
கார்காலத்தில் கரை புரள்கிறது

15 ஜனவரி, 2021

மண்வாசனை படத்தில் வைரமுத்துவின் காதல் கவிதைகள்

பாரதிராஜாவின் "மண்வாசனை " படத்தில் வைரமுத்துவின் காதல் கவிதைகள்


அவள் யார்?

யாரவள்?

இந்தக் கிராமத்து நுழைவாயில்
என்னை வரவேற்க வந்த வானவில்லா?
 
விடிந்தும் விடியாத இரவை
இன்றுதான் பார்த்தேன்
நான்
அவளின் கண்களைச் சொல்கிறேன்!
 
கிளி வந்து இன்னும்
கொத்திச் செல்லாத அத்திப் பழங்கள்
நான்
அவளின் இதழ்களைச் சொல்கிறேன்!
 
பளிங்குத் தரையில்
அள்ளி இறைத்த
வெள்ளிக் காசுகள்
நான்
அவளின் சிரிப்பைச் சொல்கிறேன்!
 
போகப் போக
என் டைரியின்
எழுதப்படாத பக்கங்களிலெல்லாம்
இதை விட

இன்னும் சொல்கிறேன்!


நான் ரசித்த பழைய புதுக்கவிதைகள்

     பழைய புதுக்கவிதைகள்

காதல்:

அழுக்கைப் போக்க
ஆடையின் விலை  பார்ப்பதில்லை
முடியைத் தடுத்த
முகத்தின் எழிலைக் காண்பதில்லை
தருவது ஒன்று
பெறுவது ஒன்று
தொழில்முறையின் தலைவிதி
 
விலை பார்க்காது
எழில் கரையாது
தருவது ஒன்று
பெறுவதும் அதுவே
காதல் தொழிலின் கணக்கு

-      சு.சங்கரசுப்ரமண்யன்


நான் ரசித்த ஹைக்கூ கவிதைகள்

நான் ரசித்த ஹைக்கூ கவிதைகள்


முன்பனி இரவில்
யாத்ரிகனின்
ஊசி நூல் தையல் 
- கொ. பயாஷி இஸ்ஸா (ஜப்பான்)

பழைய குளம் 
தவளை குதிக்கையில்
தண்ணீரில் சப்தம்

அழகான பட்டம்
வானேறி விட்டது
பிச்சைக்காரன் குடிசை மேல்

கோடைப் புல்வெளி
அந்த மாவீரர்களைன்
கனவுப் பாதையில்

நிசப்தம்
கற்களில் ஊறி விட
பூச்சிகள் சப்தம்

செவிட்டு ஊமைப் பிச்சைக்காரனின்
பிச்சைப் பாத்திரத்தை
மழை தட்டுகிறது
 
இடிந்த வீட்டில்
யுத்தம் முடிந்த பின்னே
தாய் மரம் பூத்திருக்கிறது

 
கோடை நதி
பாலம் இருந்தும்
குதிரை நீரில் நடக்கிறது
 
கடற்கரையில்
திரும்பிப் பார்க்கையில்
என் காலடிச் சுவடுகள் கூட இல்லை
 
குளித்து நனைந்த கூந்தல்
நான் போகுமிடமெல்லாம்
சொட்டுகிறது
 
மிதக்கும் விளக்கில்
வார்த்தைகளை ஒப்படைத்து
தள்ளி அனுப்புகிறேன்
 
இறந்த நண்பன்
தோளைத் தொடுவது போல
அறுவடை நாள் சூரியனின் உஷ்ணம்
 
திருவிழா முடிந்து
மரக்குதிரைகள்
அருகருகில்
 
இருபது பனிநிறை மலைகளின் மத்தியில்
ஒரு ஒரு சலனம்
கருங்குருவியின் கண்
 
தரையில் கை வைத்து
பாடல் சமர்ப்பிக்கும்
தவளை
 
மறுபடியும்
மலரிதழில்
மழையின் முணுமுணுப்பு.

கொல்லாதே
கைகளையும் கால்களையும்
தேய்த்துக் கொண்டிருக்கிறது



நான் ரசித்த விக்ரமாதித்யன் கவிதைகள்

விக்ரமாதித்யன் கவிதைகள்




எதிர்காலம் :

கொலுசு
இளமனசின் வெளிப்பாடு
ஜிமிக்கி
பருவ வயதின் அடையாளம்
தங்க வளையல்
தாராள வசதி
முத்து மாலை
சொத்து நிறைய
தாலி செய்து
போட்ட பின்னே
தர்மபத்தினியோ
தட்டழிவோ !