இந்த வலைப்பதிவில் தேடு

20 டிசம்பர், 2020

நான் ரசித்த ட்வீட்டர் காதல் வரிகள் 2

நான் ரசித்த ட்வீட்டர் காதல் வரிகள் 2



அழகான பெண்ணிடம் 
திமிர் இருக்குமோ 
இல்லையோ 
அன்பான பெண்ணிடம் 
நல்ல குணம் 
கட்டாயம் இருக்கும்...!
- NahooranA



இறுக பற்றிக்கொண்டான் 
இதயத்தை..!!
அவன் ஆழமான 
அன்பின் நேசத்தால்..!!

- Abukatheeja



எத்தனை முறை படித்தாலும் 
புரியாத புதிராகவே உள்ளது 
அவள் பார்வையின் 
அர்த்தங்கள்...!!!

பசி தீர்க்கும்
பார்வை கொடு..

தாகம் தீர்க்கும்
இதழமுதம் கொடு..

விருப்பம் தீர்க்கும்
சிறு தீண்டல் கொடு..

இதம் தரும் 
நெஞ்சனை கொடு..

இம்சை களையும்
இன்சொல் கொடு..

இத்தனையும் நீ
இல்லாத போதும்
நினைத்திருக்க
வரம் கொடு...
#கண்மணி 

தேவ ரகசியத்தை போன்ற
அதிசயத்தை நிகழ்த்திக்
காட்டுகின்ற கண்கள்,

திராட்சைப் பழரசத்தில் 
போதை மகத்துவத்தை 
புதைத்து வைத்திருக்கும் இதழ்கள்.. 

எனை நோக்கித் தூவும்
உன் வார்த்தைப் பூக்கள்
நெஞ்சக் குளத்தில்
தேங்கிக் கிடக்கும் 
நினைவை வருடாதோ!

- உவமைகளின் அரசன் நம் டி.ராஜேந்தர்.

அக்கினி பிளம்பும்
வலியில் சுட்டாலென்ன
உன் ஆறுதல் வார்த்தைகள்
தொடர்ந்தால் ஆயுளிற்கும்
நான் தாங்கிடுவேன்

#உனதானவள்
#ராட்ஷுღ

கைகளுக்குள் மூடி வைத்தும் 
விரலிடுக்குகளில் 
விடை பெறத் துடிக்கிறது; 
என் அழகியெனும் 
அவளின் நினைவுகள்

- பாண்டி பிரகாஷ்


கந்தக பூமியில் 
இருக்குமுனக்கு , 
எப்படித்தான் 
மழையை அறிமுகம் 
செய்வது ?
முத்தந்தவிர்த்து ....

#கயல் 
S.Murugesan


தேடிக் கொண்டே
இருக்கிறேன்!
சேலை விலகிய நேரத்தில்
தொட்டு விளையாடி
ஒரே ஒரு முறை உனை
அவஸ்த்தைக் கொள்ளச் செய்த
அச்சிறுமழையை!
- அடங்காதவன்


என் விழியாகி 
வழி நடத்துவாய் 
என கருதி..
கண்சிமிட்டாமல்
காத்திருக்கிறேன்.
-@Im-Navyaa




 

 
தண்ணீர் வரம் பெற்றது
அவள் பொற்கரங்களில்
தவழ்ந்ததால். 

 

















































































































































































































கருத்துகள் இல்லை: