இந்த வலைப்பதிவில் தேடு

14 அக்டோபர், 2018

நான் ரசித்த கவிதைகள் ஜூனியர் விகடனிலிருந்து கவிதைகள் - 2

நான் ரசித்த கவிதைகள்   

ஜூனியர் விகடனிலிருந்து கவிதைகள் - 2 

 

பட்டப் பகலிலேயே
வீட்டில்
முகமூடிகளின் கொள்ளை !
கதறிய நான்
கடவுளிடம்
முறையிட்டேன்....
கடவுளும் கதறினார்
"என் கோயிலிலும்
கொள்ளை" என்று !
-  ஓடுவெட்டி சொல்லழகன்,
                    ஜமீன் எண்டத்தூர்.

'தனிக் கட்சி
தனிக் கட்சி' 
என்று எகிறிக் கொண்டிருந்த எம்.எல்.ஏ க்களிடம்
எஸ்.டி.எஸ் முகவரி கேட்டு
எதிரில் வந்தான் 
போஸ்ட் மேன்
"சகுனம் 
சரியில்லை' என்று 
வழிந்தோடிய
கண்ணீரைத் 
துடைத்தபடி
ஓடினார்கள்
'கட்சிப் பணிக்கு'
- நெல்லை .ப . பழனிராஜ்
                          கரையிருப்பு
(எம் ஜி ஆர் தனது அமைச்சரவையிலிருந்து எஸ் டி எஸ் அவர்களை நீக்கம் செய்த போது எழுதப்பட்ட கவிதை)

 

கருத்துகள் இல்லை: