இந்த வலைப்பதிவில் தேடு

14 அக்டோபர், 2018

நான் ரசித்த கவிதைகள் - நீலமணி கவிதைகள்

நான் ரசித்த கவிதைகள்  
நீலமணி கவிதைகள்
தீண்டாமை :

ராமர் தடவி
அணில் கோடு பெற்றதேல்
சீதையைத்
தொட்டதே இல்லையா?

அழைப்பு :
 நிரோத் உபயோகியுங்கள்
நிரோத் உபயோகியுங்கள்
என்று விளம்பரங்கள்
வலியுறுத்துகின்றன;
வாயேன்.

...................

காபரேக்காரியைக்
கட்டிக் கொண்டேன்
மியூஸிக் இன்றி
அவிழ்க்க மறுக்கிறாள்
கர்பி ஹட்டே ஏ....வ், ஒரு
சோடா கொண்டாய்யா.


பர்ஸ்ட் வ்யூ:
இரண்டாம் உலகத்
தமிழ் மாநாட்டுக்குத்
திறக்கப்பட்டன சென்னையில்
இருபத்தியொரு 
புதிய லெட்ரின்கள் 
- நீலமணி

கருத்துகள் இல்லை: