இந்த வலைப்பதிவில் தேடு

8 அக்டோபர், 2018

நான் ரசித்த கவிதைகள் - நா.காமராசன்



_______

சூரிய சந்திர நாடகம்:

உன் முகத்தைப் பார்த்து விட்டு
மலர்களைப் பார்த்தால்....
வசந்த காலம் செத்துப்
பிறந்தது போல் தெரிகிறது.

கனவிலே சிரித்து
விழிக்கும் போது அழும்
குழந்தையைப் போல....
உன்னைக் கண்டு மரியும்
மனம் தவிக்கும்
......

       
 உன் முகம் மணக்கும் போது
உலகின் எல்லா நறுமணல்களும்
ஆவியாகுமோ?
மே மாதப் பூவைத் தொடும்
காற்றைப் போல்
உன் பார்வை
என் மனத்தைத் தொடுகிறது

அல்லி மலர்க் கண்கள்
பேசும் ரோஜா உதடுகளைப்
பார்க்கின்றன

- ஆப்பிள் பசி
நா.காமராசன்



கருத்துகள் இல்லை: