இந்த வலைப்பதிவில் தேடு

12 அக்டோபர், 2018

நான் ரசித்த கவிதைகள் - தாய் இதழில் வந்தவை

நான் ரசித்த கவிதைகள்  

தாய் இதழில் வந்தவை



 சுவாசித்த குற்றம் :

நீதிமன்றத்தின்
புழுக்கம் தாளாமல்
நீதி தேவதை ஒரு நாள்
காற்று வாங்கக்
கடற்கரை சென்றாள்
திரும்பவும் அவன்
நீதிமன்றத்தில்
           நுழைத்த போது
வாயிற் காவலன்
வழிமறித்தான்
அந்நியர்கள் உள்ளே
பிரவேசிக்கக் கூடாது
______

வேண்டுகோள் :

தையல்காரியே....
தையல்காரியே....
கிழிந்திருக்கும்
உன் மேலாடையை
சீக்கிரம் தைத்து விடு
எதிர் வீட்டிலிருக்கும்
என் இதயம்
கந்தல் கந்தலாய்க்
கிழிந்து கொண்டிருக்கிறது.

புரிதல் :
நான் முத்தெடுக்க
மூழ்கினேன்
உன் மனம்
புதைமணல் என்பதைப்
புரிந்து கொள்ளாமல்

______

இமையுதிர் காலம் :
உன்னைப் பாராத
தினங்கள்
நாட்காட்டியில் இருந்து
உதிர்கின்றன.
இமைகளில் இருந்து
உதிர்கிற
கண்ணீர்த் துளிகளாக .

நீல மொட்டுக்கள்
நீர்த்துப் போன தாள்கள் :
- பிருந்தா சாரதி

கருத்துகள் இல்லை: