இந்த வலைப்பதிவில் தேடு

2 அக்டோபர், 2018

நான் ரசித்த கவிதைகள் - வானம்பாடிகள் கவிதைகள்

வானம்பாடிகள் கவிதைகள் 



பொங்கல் :

 

 

தீயவன் தழுவியதால்                
உள்ளம் கொதித்த
பானை
முக்காடு இட்டுக் கொள்கிறது

 
 

பண்டிதன் :                    

உன் வீடு தீ பிடித்து எரிகிறது 
என செய்தி வந்தால்
அதிலுள்ள 
சந்திப்பிழையைப்
பார்த்துக் கொண்டிருக்கும்
ஆசான்









விடிவு :

பூமித்தோலில்
அழகுத் தேமல்

பரிதி புணர்ந்து
படரும் விந்து

கதிர்கள் கமழ்ந்து
விரியும் பூ

இருளின் சிறகை
தின்னும் கிருமி

வெளிச்சச் சிறகில்
மிகுக்கும் கிருமி

- தருமு அரூப் சிவராம்

முகத்தில் முளைத்த 
முலைகளாய் மயக்கும் என் 
பிரதியின் கண்கள்

- தருமு அரூப் சிவராம்

கருத்துகள் இல்லை: