இந்த வலைப்பதிவில் தேடு

10 டிசம்பர், 2020

நான் ரசித்த ட்வீட்டர் வரிகள்


தெளிவில்லாத நேரத்தில்
மௌனமும்
சூழ்நிலை சரியில்லா

நேரத்தில் புன்னகையும்
நமக்கு பாதுகாப்பானது.

- Thala Sp


அமைதியாக இருப்பதனால் 
அலட்சியமாக எண்ண வேண்டாம் 
அது ஆயிரம் ஏமாற்றங்களையும் 
துரோகங்களையும் சந்தித்து இருக்க கூடும்...!

- அன்பே சிவம்
--------------------------------------------------------------------------
சுமைகள் 
என்பது 
அதன் 
கனங்களில் 
இல்லை

சுமக்கும்
மனங்களில் !

#தீtwitz
-------------------------------------------------------------------
"உரு"ப்பட போவதெல்லாம்
"உளி"பட்ட பிறகுதான்!!..

"சிற்பம்"..

- காளையன்

---------------------------------------------------------------------
இளவரசியின்
கை பட்டதும்
மோட்சம் பெற்றது
உலை அரிசி 

- பாலசுப்ரமணி


-------------------------------------------------------------------------
விருப்பம் இருந்தால் ஆயிரம் வழிகள் 
இல்லாவிட்டால் ஆயிரம் காரணங்கள் 
இவை தான் மனிதனின் எண்ணமாம்!!.

-Vippedu Veera

-----------------------------------------------------------------------------
ஆறிப்போன தேநீர்
என்ன நினைத்ததோ தெரியவில்லை, 
நாம் ஆசையோடு
முத்தம் பதிக்கும் பொழுதெல்லாம்,
ஆடையை அவிழ்த்து 
அப்பிவிடுகிறது,
மேலுதட்டில்...

-TN72 DUSKY KUNDAN
------------------------------------------------------------------------------
முகமூடியை எத்தனை முறை 
கழட்டி மாட்டினாலும் 
உண்மை முகம் 
அவ்வப்போது 
முளைத்துக்கொண்டேதான் 
இருக்கும்!!!

- மாஸ்டர் பீஸ்


















--------==============-------------------------


பார்த்த முகத்தையே 
பார்த்துக்கொண்டிருந்தால் 
போர் அடிக்குது 
என்று சொல்லவே முடியாத முகம் 
குழந்தைகளின் முகம்.

_ ரஹீம் கஸ்ஸாலி



- - - - ------------------------------------------------------ - - - - -
ஓடுகின்ற ரயில்களை 
ஒரு போதும் ரசித்திருக்கமாட்டார்
தேநீர் வியாபாரி..! 
- AkashKannan96
                                                                  
_ _ _ ________________________ _

யாரிடமும் நெருங்காமல் 
சிலர் இருக்க காரணம் 
யாரும் வேண்டாம் 
என்பதற்காக அல்ல..
பட்டதே_போதும் 
என்பதற்காகவும்....❤️ 

- பனித்துளி




கருத்துகள் இல்லை: